விஷ்ணுபுரம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதை முன்னிட்டு SBS வானொலிக்கு தெளிவத்தை ஜோசப் அவர்கள் வழங்கிய பேட்டியின் ஒலிப்பதிவு http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/300933/t/-I-couldn-t-have-done-it-without-her-support/in/english
Daily Archives: December 20, 2013
விஷ்ணுபுரம் விழா 2013 – வழக்கமான வினாக்கள்
விழாவை ஒட்டி வெளியான வசைகளுக்கு ஜெயமோகனின் விளக்கம் நாளை மறுநாள் [ டிசம்பர் 22 ] அன்று கோவையில் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. நான் நாளை [21] அன்று காலை கோவையில் வந்திறங்குகிறேன். சென்றவருடம் போலவே வரும் நண்பர்கள் தங்குவதற்கு ஒரு கல்யாணமண்டபம் ஏற்பாடாகியிருக்கிறது. குறைந்தவசதிகளுடன் கூட்டமாக பொதுக்கூடத்தில் தங்கி இரவெல்லாம் பேசுவதுதான் விஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பியல்பாக இதற்குள் ஆகிவிட்டிருக்கிறது. இம்முறையும் அதுவே விழாவைப்பற்றி சென்றமுறையெல்லாம் வந்ததுபோன்ற வசைகள் வரவில்லையே , அது ஒருகுறையாகவேContinue reading “விஷ்ணுபுரம் விழா 2013 – வழக்கமான வினாக்கள்”
சுரேஷ்குமார இந்திரஜித் :விஷ்ணுபுரம் விருது விழா 2013 சிறப்பு விருந்தினர்
விஷ்ணுபுரம் விருதுவிழா 2013ல் சுரேஷ்குமார இந்திரஜித் கலந்துகொள்கிறார் சுரேஷ்குமார இந்திரஜித் ஓர் உரையாடலில் சொன்னார் ‘ கதை மாதிரி எதாவது எழுதிப்பாக்கலாம்னு நினைக்கிறேன்’ அப்போது அவரது இரண்டு சிறுகதைத்தொகுதிகள் வெளிவந்திருந்தன. சுரேஷ்குமார இந்திரஜித் தமிழில் வண்ணதாசன், நாஞ்சில்நாடன், பூமணி தலைமுறைக்குப்பின் வந்த படைப்பாளிகளில் முக்கியமானவர். முன்னோடிகள் உருவாக்கிய வடிவங்கள், நம்பிக்கைகள் அனைத்தையும் கடந்துசெல்லமுயன்றவர்களில் ஒருவர். அதில் முக்கியமான இரண்டு விஷயங்கள் கதைக்கட்டு [Plot] உணர்ச்சிகரம். சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் சரியான பொருளில் கதைகள் அல்ல. அவற்றுக்கு தொடக்கம்Continue reading “சுரேஷ்குமார இந்திரஜித் :விஷ்ணுபுரம் விருது விழா 2013 சிறப்பு விருந்தினர்”